search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் சரியான இட ஒதுக்கீடு வழங்கப்படும்
    X

    சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் சரியான இட ஒதுக்கீடு வழங்கப்படும்

    • சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் சரியான இட ஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பேட்டியளித்தார்.
    • பிரதமர் மோடி தோல்வி பயத்தில் இந்தியா கூட்டணியை பலவீனப் படுத்த நினைக்கிறார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறிய தாவது:-

    நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது காங்கிரஸ் கட்சி தான். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் சரியான இட ஒதுக்கீடு வழங்க முடியும். தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்களை அரசு கொள்ளையடித்து வருவதாக பிரதமர் மோடி பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவில்கள் அரசின் கட்டுப் பாட்டில் தான் இருந்தன. இந்திய வரலாறு குறித்து மோடிக்கு சரியாக தெரியாது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    பிரதமர் மோடி தோல்வி பயத்தில் இந்தியா கூட்டணியை பலவீனப் படுத்த நினைக்கிறார். பட்டாசு பிரச்சினை தொடர்பாக விரைவில் முதல்-அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். தமிழகம், பாண்டிச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியை காங்கிரஸ் கட்சி தொடங்கி விட்டது. விருது நகர், கன்னியாகுமரி தொகு தியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே மீண்டும் அந்த தொகுதி களை ஒதுக்குமாறு வலியு றுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×