search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்மாவதி ஆட்டோ சர்வீசில் புதிய வகை பெட்ரோல், டீசல் அறிமுகம்
    X

    பத்மாவதி ஆட்டோ சர்வீசில் புதிய வகை பெட்ரோல், டீசல் அறிமுகம்

    • ராஜபாளையம் பத்மாவதி ஆட்டோ சர்வீசில் புதிய வகை பெட்ரோல், டீசல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • கே.டி.ஆர்.பல்க் ரங்கசாமி, எம்.கே.எஸ்.பல்க் அசின் காதர், ரபீக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-மதுரை ரோட்டில் உள்ள பத்மாவதி ஆட்டோ சர்வீசில் 95 ஆக்டேன் எக்ஸ்.பி. பெட்ரோல் மற்றும் டீசல் அறிமுக விழா மேனேஜிங் டைரக்டர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடந்தது. நிர்வாக இயக்குநர் என்.கே.ராம்விஷ்ணு ராஜா வரவேற்றார். என்.கே.ராம்வெங்கட் ராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் விருதுநகர் மாவட்டப் பொது மேலாளர் ஸ்ரீதர், புதிய 95 ஆக்டேன் எக்ஸ்.பி. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கியதுடன் அவற்றின் விற்பனையை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், சாதாரண பெட்ரோல், டீசலை விட அதிக ஆக்டேன் மதிப்புடையது. 20 சதவீதத்திற்கு மேல் என்ஜின் சக்தியை அதிகரிக்கிறது. அதிகமான வெப்ப உமிழ்வைக் குறைத்து எரிபொருள் சிக்கனத்தை 3.95 சதவீதம் மேம்படுத்துகிறது, சிறந்த எரிப்பானாக விளங்குகிறது, ஒலி மாசுபாட்டை குறைத்து எரிபொருள் சிக்கனத்தை 5-ல் இருந்து 6 சதவீதமாக அதிகரிக்கிறது. இதில், அதிக மைலேஜ், குறைந்தபுகை, சொகுசான டிரைவிங், சுத்தமான என்ஜின், உடனடி பிக்அப் போன்ற சிறப்பம்சங்கள் நிறைய இருப்பதால் இன்றைய காலகட்டத்திற்கு மிக மிக அவசியமானதாகும் என்றார்.

    விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் விருதுநகர் மாவட்ட துணை மேலாளர் வம்சி கிருஷ்ணன் வாகனங்களை சிறப்பாகவும் எளிமையாகவும் பராமரிக்க வேண்டிய முறைகள் குறித்து பேசினார். ஏ.கே.டி.ஆர்.பல்க் ரங்கசாமி,

    எம்.கே.எஸ்.பல்க் அசின் காதர், ரபீக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×