search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிதாக போடப்பட்ட சிமெண்ட் சாலைகள்
    X

    புதிய தார்சாலையை ரகுராமன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    புதிதாக போடப்பட்ட சிமெண்ட் சாலைகள்

    • ராஜபாளையம் ஒன்றிய கிழக்கு பகுதிகளில் புதிதாக போடப்பட்ட சிமெண்ட் சாலைகளை சாத்தூர் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • புதிதாக தார்சாலைகள் போடப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய ஊராட்சி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக தார்சாலைகள் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நல்லம நாயக்கன்பட்டி ஊராட்சி பானாங்குளம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெரு மற்றும் ஜமீன் நத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள வரகுண ராமபுரம் பெருமாள் கோவில் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நிதியிலிருந்து புதிதாக போடப்பட்ட வாறுகாலுடன் கூடிய சிமெண்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ரகுராமன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    மேலும் வரகுண ராம புரம் சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அங்குள்ள பணி செய்யும் செவிலியரிடம் கிராம மக்களின் எண்ணிக்கை குறித்தும், அவர்களுக்கு இல்லம் தேடி மருத்துவம் எவ்வாறு சென்று சேர்கிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் ம.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் ராஜபாளை யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×