என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.200 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்படும்
    X

    ரூ.200 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்படும்

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.200 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
    • ரூ.100 செலுத்தி புதிய உறுப்பினராக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் நடப்பாண்டு ரூ.200 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் போதிய உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தற்போது வரை ரூ.32.50 கோடிக்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வட்டியில்லா பயிர்க்கடன் பெற்று அனைத்து விவசாயிகளும் பயனடையலாம்.

    கடன் தேவையுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், 10(1) சிட்டா, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ண ப்பித்து, பயிர்க்கட ன்கள் பெறலாம். கூட்டுறவு சங்கங்களில் இதுவரை பயிக்கடன் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.100 செலுத்தி புதிய உறுப்பினராக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்து ள்ளார்.

    Next Story
    ×