search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு
    X

    திருச்சுழி அருகே தும்முசின்னம்பட்டி கிராமத்தில் கண்டெ டுக்கப்பட்ட நடுகல்லை படத்தில் காணலாம்.

    நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

    • திருச்சுழி அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • நடுகல்லில் இரண்டு உருவங்கள் சிற்பமாக செதுப்பட்டுள்ளன.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் தும்மு–சின் னம்பட்டி கிராமத்தில் ஒரு பழமையான சிலை இருப் பதாக குலசேகர–நல்லூ–ரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கொடுத்தார். அதன்பேரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான ஸ்ரீதர், முனைவர்கள் தாமரைக் கண்ணன், செல்லபாண்டி–யன் போன்றோர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அவை ஆயி–ரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியரின்சிற் பம் என்பது தெரியவந் தது.இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், நமது முன்னோர்கள் வீரத்தில் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக நினைவு கற் களை நட்டு வைத்து வழி–பட்டு வந்துள்ளனர். அந்த கற்கள் தொடக்கத்தில் ஒழுங்கற்ற வையாகவும், உயரமாகவும் இருந்தன. அதை நெடுங்கல் என்று அழைப்பர்.

    இந்த நெடுங்கல் வழி–பாட்டின் தொடர்ச்சியாக நடுகல் வழிபாட்டை கூற–லாம்.இந்த நடுகற்களில் கல்வெட்டுகள், உருவங்கள் எவையேனும் ஒன்று இடம் பெற்றிருக்கும் அல்லது இரண்டுமே இடம்பெற்று இருக்கும்.

    தற்போது நாங்கள் கண்ட–றிந்த நடுகல்லில் இரண்டு உருவங்கள் சிற்பமாக செதுப்பட்டுள்ளன. ஒன் றரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக் கப்பட்டுள்ளது.

    இதில் இரண்டு வீரர்கள் அள்ளி முடிந்த கொண்டை–யுடனும், காதுகளில் பத்திர குண்டலங்களும், இடையில் இடைக்கச்சையும் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தில் வலது புறம் உள்ள வீரனின் வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் இடம்பெற்றுள்ளது.

    இடதுபுறம் உள்ள வீர–னின் வலதுகையில் வாள் போன்ற ஆயுதமும், இடது கையில் ஒரு ஆயுதமும் ஏந்தி போர் புரியும் வீரர்கள் போன்று சிற்பம் முற்கால பாண்டியருக்கே உரிய கலைபாணியில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் உருவ அமைப்பை வைத்துப் பார்க் கும்போது அக்காலத்தில் இப்பகுதியில் நடந்த பூசலில் ஈடுபட்டு ஊர் நலனுக்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறினர்.

    Next Story
    ×