search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவர்-இளம்பெண் தற்கொலை
    X

    கல்லூரி மாணவர்-இளம்பெண் தற்கொலை

    • விருதுநகர் அருகே கல்லூரி மாணவர், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவரது மகன் அகத்தியன் (17). பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தேர்வில் 3 பாடங்களில் அரியர் வைத்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து பெற்றோர்கள், நண்பர்களிடம் கூறி வருத்தப் பட்டார். இந்த நிலையில் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் தற்கொலைக் கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக் கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் இந்திராநகர் காலனியை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன். இவரது மகள் விஷ்ணுபிரியா (17). இவரை பெரம்பலூரில் உள்ள அரசு மகளிர் கல்லூரி யில் பெற்றோர் சேர்த்தனர். ஆனால் அங்கு தங்கும் விடுதி வசதி இல்லாததால் மீண்டும் ஊருக்கு அழைத்து வந்தனர். மாணவி பெற்றோரிடம் வேறு கல்லூரியில் சேர்க்குமாறு கூறியுள்ளார். அப்போது விடுதி வசதியுள்ள கல்லூரியை விசாரித்து சேர்த்து விடுவதாக பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் விஷ்ணுபிரியா மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×