search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுங்கச்சாவடி அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும்-காங்கிரஸ் வலியுறுத்தல்
    X

    சுங்கச்சாவடி அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும்-காங்கிரஸ் வலியுறுத்தல்

    • சாத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சமரச கூட்டத்தில் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் எட்டூர் வட்டம் பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியின் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூய்மைப் படுத்தப்படாமல் உள்ளது. மேலும் அவ்வப்போது இந்த வாய்க்காலில் கால்நடைகள் விழுந்து இறந்து பெரும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

    இந்த கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் கால்வாயை சுத்தப்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடனான சமரச கூட்டம் வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ஐயப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மேலும் அரசு அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கேற்றனர். அப்போது வாய்க்காலை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×