search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் வட்டி கேட்கும் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை
    X

    கூடுதல் வட்டி கேட்கும் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை

    • கூடுதல் வட்டி கேட்கும் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் டி.எஸ்.பி.யிடம் மகளிர் சுய உதவிக் குழுவினர் மனு கொடுத்தனர்.
    • 3 குழுவிலும் 30 உறுப்பினர்கள் உள்ளனர்.

    பாலையம்பட்டி

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூர ணியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் ''தங்க தாமரை'' என்ற மகளிர் குழுவுக்கு தலைவியாக உள்ளார். இதேபோல் மரியா தேவி என்பவர் ''மகரம்'' குழுவிற்கு தலைவியாகவும், லட்சுமி என்பவர் ''கணிமலர்'' குழுவிற்கு தலைவியாகவும் உள்ளனர்.

    இந்த 3 குழுவிலும் 30 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 3 குழுவிற்கும் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற தாகவும், அந்த கடனை முழுமையாக கட்டி விட்டதாகவும், அதற்கு தடையில்லா சான்று கேட்டபோது நிதி நிறுவனத்தின் மேலாளர் மேலும் நீங்கள் பணம் கட்ட வேண்டும்.

    இல்லை என்றால் கூடுதலாக கடன் வாங்க வேண்டும் என்றுகூறினாராம். கூடுதலாக கடன் வாங்க இல்லையென்றால் தடையில்லா சான்று வழங்க முடியாது என்றும் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து 3 மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள்,போலீஸ் டி.எஸ்.பி. சகாயஜோஸை சந்தித்து நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து தடையில்லா சான்று பெற்று தர வேண்டும் என்று கோரி மனு அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி. பதில் அளித்ததின் பேரில் மகளிர் குழுவினர் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×