என் மலர்
உள்ளூர் செய்திகள்

2-வது திருமணம் செய்த வாலிபர்- பெண்ணுக்கு சரமாரி அடி-உதை
- 2-வது திருமணம் செய்த வாலிபர்- பெண்ணுக்கு சரமாரி அடி-உதை
- ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் ஜோதி புகார் செய்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மிஷன் கோவில் சர்ச் தெருவை சேர்ந்தவர் அந்தோணி (வயது 47). இவருக்கு மனைவியும், கல்லூரியில் படிக்கும் ஒரு மகளும், 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர்.
இவரது வீட்டு அருகில் ஜோதி (37) என்ற பெண் வசித்து வருகிறார். டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்த இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு கிடைக்க வேண்டிய பண பலன்கள் ரூ.10 லட்சம் வரை ஜோதிக்கு கிடைத்துள்ளது.
ஜோதிக்கு 11-ம் வகுப்பு மற்றும் 9ம்- வகுப்பு படிக்கும் இரு மகன்கள் உள்ளனர். கணவர் இறந்ததால் கிடைத்த பணத்தை குழந்தைகளின் வங்கி கணக்கில் டொபாசிட் செய்ய ஜோதி மறுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் அந்தோ ணிக்கும், ஜோதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் இர வோடு இரவாக வெளியூர் சென்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஊருக்கு வந்த அந்தோணி 2-வது மனைவி யுடன் குடி த்தனம் நடத்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று ஜோதியின் சகோதரன், சகோதரிகள் மற்றும் மகன்கள் வீடு புகுந்து ஜோதியை தாக்கியு ள்ளனர். தடுக்க போன அந்தோணிக்கும் அடி உதை விழுந்துள்ளது.
இதுகுறித்து ராஜபாளை யம் வடக்கு காவல் நிலை யத்தில் ஜோதி புகார் செய்தார். அதன் பேரில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தினர் செந்தில்குமார் என்ற சார்லஸ், சசிகுமார், நிவேதா, சங்கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.






