search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலிக்குடங்களுடன் கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்
    X

    காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

    காலிக்குடங்களுடன் கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்

    • அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
    • பழுதடைந்த ஆனந்தகாவேரி வாய்க்கால் பாலத்தை சீரமைத்து தர வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள விச்சனூர் படுகை கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என்ற கூறி இன்று காலை பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பாக காலிகுடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு பொதுவுடமை இயக்கத்தின் கிளைச் செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்.கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பொதுவுடமை இயக்கத்தின் நிர்வாகிகள் தேவதாஸ், வைத்தியநாதசுவாமி, முருகையன், ஜெயராஜ், திருநாவுக்கரசு, மணிகண்டன், விஜயகுமார், பகத்சிங் ஆகியோர் பேசினர்.

    மேலும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும், மேலும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், சாலை வசதியை மேம்படுத்தி வேண்டும், பழுதடைந்த ஆனந்தகாவேரி வாய்க்கால் பாலத்தை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பூதலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    இதனால் அங்கு பரபரப்பாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×