search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலை நிர்வகிப்பதில் பிரச்சினை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்த கிராம மக்கள் மனு
    X

    இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.

    கோவிலை நிர்வகிப்பதில் பிரச்சினை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்த கிராம மக்கள் மனு

    • நாகையகோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் மனு அளிக்க வந்தனர்.
    • இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தி பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வழிபாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள நாகையகோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் மனு அளிக்க வந்தனர்.

    அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் கிராமத்தில் பழமையான மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் வரி வசூல் செய்து சிறியதாக கோவில் கட்டி வழிபட்டு வந்தோம்.அதனைத் தொடர்ந்து கோவில் உண்டியல் மற்றும் நன்கொடை வசூல் செய்யப்பட்டது.

    இதனை தங்கராஜ் என்பவர் நிர்வகித்து வந்தார். ஆனால் அவரது வரவு, செலவு கணக்கில் பொதுமக்களுக்கு திருப்தி இல்லை. இது குறித்து கேள்வி எழுப்பும் பொதுமக்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி பேசுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.

    ஊர் திருவிழா நடைபெறும் போது வரி வசூல் செய்வது தொடர்பாக ஒவ்வொரு வருடமும் பிரச்சினை செய்து வருகிறார். மேலும் எரியோடு போலீஸ் நிலையத்தில் அவர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு தெரிந்த சிலரது செல்வாக்கை பயன்படுத்தி பொதுகமக்களை மிரட்டி வருகிறார். எனவே இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தி பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வழிபாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×