search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை
    X

    கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை

    • 10 மாதமாக அவருக்கு சம்பளம் வழங்கவில்லை.
    • எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நடுப்பட்டி கிராமத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து பணி முடிந்து சொந்த ஊரான வாச்சாத்திக்கு வந்தவர் சம்பவத்தன்று எலி மருந்தை சாப்பிட்டு உள்ளார். இது குறித்து கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் உறவினர்கள் விசாரித்தபோது , அடிக்கடி அவரை இட மாற்றம் செய்ததாகவும், 10 மாதமாக அவருக்கு சம்பளம் வழங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

    மேலும் இதனால் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து மனவி ரக்தியில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்தங்க ரையில் உள்ள மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்து அதனை தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அதனை தொடர்ந்து சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அவரது மகன் தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கோபிநா தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×