என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2023/10/26/1972266-download.webp)
கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 10 மாதமாக அவருக்கு சம்பளம் வழங்கவில்லை.
- எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நடுப்பட்டி கிராமத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து பணி முடிந்து சொந்த ஊரான வாச்சாத்திக்கு வந்தவர் சம்பவத்தன்று எலி மருந்தை சாப்பிட்டு உள்ளார். இது குறித்து கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் உறவினர்கள் விசாரித்தபோது , அடிக்கடி அவரை இட மாற்றம் செய்ததாகவும், 10 மாதமாக அவருக்கு சம்பளம் வழங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் இதனால் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து மனவி ரக்தியில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்தங்க ரையில் உள்ள மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்து அதனை தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அதனை தொடர்ந்து சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அவரது மகன் தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கோபிநா தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)