search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காடு வளர்ப்பை அதிகரிக்க மரம் நடும் விழா- விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு
    X

    காடு வளர்ப்பை அதிகரிக்க மரம் நடும் விழா- விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு

    • தூத்தூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அமைச்சர் மனோ தங்கராஜ் மரம் நடும் பணியை துவக்கி வைத்தார்.

    கன்னியாகுமரி:'

    கன்னியாகுமரி பசுமை மாவட்டம் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் காடுவளர்ப்பை அதிகரிக்கவும், கடலரிப்பை தடுக்க இயற்கை அரணை உருவாக்கவும் மரம் நடும் விழா நடைபெற்றது.

    தூத்தூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் P.N.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 12 கி.மீ தூரத்தில் பனை, புன்னை, தென்னை, பூவரசு மர விதைகள் மற்றும் கன்றுகள் நடப்பட்டன.

    அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வனத்துறை அதிகாரி, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், தூத்தூர் பங்கு தந்தை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×