என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம்
    X

    தருமபுரி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம்

    • அனைத்து முகாம்களிலும் கட்சியின் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பென்சில், பேனா மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்க வேண்டும்.
    • ஆயிரம் தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    தருமபுரி,

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 61 -ம் ஆண்டு பிறந்த நாளையும், மணிவிழாவின் நிறைவு நாளையும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தருமபுரி மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியார் மன்றத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைவரின் மணிவிழா நிறைவு மற்றும் 61 -ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    அனைத்து முகாம்களிலும் கட்சியின் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பென்சில், பேனா மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்க வேண்டும்.

    மேலும் 61-ம் ஆண்டு பிறந்தநாள் விழா நினைவாக 61 நபர்கள் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் செய்வது, 61 நபர்கள் உறுப்பு தானங்கள் செய்வது, ஆயிரம் தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்திற்கு தருமபுரி மைய மாவட்ட செயலாளர் பாண்டியன், தலைமை வகித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தருமபுரி கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் தமிழ் அன்வர், துணை மண்டல செயலா ளர்கள் மின்னல் சக்தி, மாயவன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் தனம், முன்னாள் மண்டல செயலாளர் நந்தன், மாவட்ட பொருளாளர் மன்னன், நாடாளுமன்ற மாநில துணைச் செயலாளர் கோட்டை கலைவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராமன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×