search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி:தருமபுரியில் காங்கிரஸ் கட்சியினர்  பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    X

    கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி:தருமபுரியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    • முன்னாள் எம்.பி.யுமான தீர்த்தராமன் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
    • தர்மபுரி 4 ரோட்டில் மாவட்டத் தலைவர் முபாரக் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    தருமபுரி,

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

    இதனை வரவேற்று தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகம் அருகில் மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான தீர்த்தராமன் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

    இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், சண்முகம், ஜெயசங்கர் நகர தலைவர் வேடியப்பன், வட்டார தலைவர்கள் வெங்கடாச்சலம், ஞானசேகர், சிலம்பரசன், காமராஜ், பெரியசாமி, சந்திரசேகர்,மற்றும் சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் முபாரக் விவசாய அணி தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் ஹரி, நடராஜன் ஏராளமானார் கலந்துகொண்டனர்.

    இதேபோல் ஐ.என்.டி.யூ சி. காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலை அருகிலும் மாவட்டத் தலைவர் மோகன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் போக்குவரத்து பிரிவு பொதுச் செயலாளர் தங்கவேல், நிர்வாகிகள் ஆசிரியர் முத்து, ராஜேந்திரன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், எஸ்..சி.- எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் சம்பத்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் குமரவேல், நிர்வாகிகள் தேவராஜ் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று சிறுபான்மை பிரிவு சார்பில் தர்மபுரி 4 ரோட்டில் மாவட்டத் தலைவர் முபாரக் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பின்னர் அவர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் சபியுல்லா, சுரேஷ், ஆசிப், நகர தலைவர் சபீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மொரப்பூரில் வட்டாரத் தலைவர் சந்திரசேகர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    Next Story
    ×