என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரனிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கியபோது எடுத்தப்படம்.
தருமபுரியிலிருந்து ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் ரயில் நேரத்தை மாற்றாமலிருக்க அதிகாரிகளுடன் பேச்சு
- தருமபுரி வழியாக பெங்களூரு செல்லும் ரெயில் நேரம் மாறுகிறது.
- இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஓசூர்,
தருமபுரியிலிருந்து ஓசூர் வழியாக பெங்களூருக்கு பாசஞ்சர் ரயில் சென்று வருகிறது. ஓசூரிலிருந்து வேலைக்கு செல்வோர், அனைத்து தரப்பினர் 1,000-க்கும் மேற்பட்டோர் இந்த ரெயிலில் நாள்தோறும் பெங்களூரு செல்கின்றனர்.
தற்போது தருமபுரி யிலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு ஓசூர் வழியாக பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்தை காலை 8.10 மணிக்கு சென்றடைகிறது.
இந்தநிலையில் வருகிற 20-ந் தேதி முதல், ஒன்றரை மணிநேரம் தாமதமாக, அதாவது 6.30 மணியளவில் தருமபுரி யிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு 10 மணியளவில் சென்று சேர்வதாக, ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் ரயில் பயணிகள் மிகவும் அதிருப்தி யடைந்துள்ள னர். மேலும், சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறை களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழிலாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்லமுடியாத சிரமம் ஏற்படுவதாகவும் வேதனை யடைந்துள்ளனர்.
இதையடுத்து ஓசூர் ரயில் நிலையத்தில், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரனிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கி, அதில் ரயில் நேரத்தை மாற்றக்கூடாது. தற்போதுள்ள நேரமே தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அவர், இது சம்பந்தமாக ரயில்வே துறை அதிகாரிகளிடம் பேசி, தற்போதுள்ள நேரமே தொடர ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
அப்போது, மேற்கு மாவட்ட பா.ஜ.க துணைத்தலைவர் ராம கிருஷ்ணன், கட்சி நிர்வாகி பாரதிராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.