search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரம்ஜான் பண்டிகையையொட்டி   கடலூரில் முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை:   மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் வழங்கினார்
    X

    ரம்ஜான் பண்டிகையையொட்டி மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை வழங்கினார்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி கடலூரில் முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை: மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் வழங்கினார்

    • பள்ளிவாசலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    கடலூர்:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அஞ்சுமனே நூரே முஹம்மதியா ஜாமியா பள்ளிவாசலில் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கி பள்ளி வாசலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இதில் பள்ளிவாசல் முக்தவல்லி ரபீக், செயலாளர் நஜீர் அகமது, ராமலிங்கம், முருகன், அஷ்ரப் அலி, செந்தில், சிலம்பு, அப்துல் ரஷீத், சதிஷ், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×