என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே துணிகரம்: மின்வாரிய ஊழியர்களை சிறைபிடித்து ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை
- ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 கம்ப்யூட்டர்கள், 5 மின்மாற்றிகளின் பொருட்கள் உள்ளிட்ட வற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- 10 பேர் கும்பலுக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரிகையில் துணை மின் நிலைய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 26-ந்தேதி அன்று 23 முதல் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத 10 பேர் கும்பல் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்தனர்.
அங்கு அலுவலக கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கு பணியில் இருந்த ரியாத், முனியப்பன் ஆகியோரை சிறை பிடித்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 கம்ப்யூட்டர்கள், 5 மின்மாற்றிகளின் பொருட்கள் உள்ளிட்ட வற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் காயில்களை திருடி விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து மின்வாரிய உதவி பொறியாளர் பராமரிப்பு பிரிவு அலுவலர் முருகன் பேரிகை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்களின் கைரேகை பதிவுகள் கிடைத்துள்ளது. அதன் மூலம் அந்த கும்பலை பிடிக்க வலை விரித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்