என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓசூரில் துணிகரம் கத்திமுனையில் 6 பேரிடம் ரூ.1½ லட்சம் பணம், செல்போன்கள் பறிப்பு
Byமாலை மலர்28 Jun 2022 9:26 AM GMT (Updated: 28 Jun 2022 10:03 AM GMT)
- பறிபோன செல்போன்களின் மதிப்பு ரூ.15,000- ஆகும்.
- மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்,
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது27), இவர், ஓசூர் அருகே பத்தலபள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் அந்த பகுதியில் ஒரு அறையில், நண்பர்கள் 5 பேருடன் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அறைக்கதவு திறந்திருந்த நிலையில் 2 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கு கத்திமுனையில் ரொக்கப் பணம் ரூ.1,21,500 மற்றும் 4 செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். பறிபோன செல்போன்களின் மதிப்பு ரூ.15,000- ஆகும்.
இதுகுறித்து செல்வம் உள்பட 6 பேரும், ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X