search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் கம்யூட்டர்களை மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
    X

    அரசு பள்ளியில் கம்யூட்டர்களை மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

    • பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவ ர்களின் சேர்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • மாணவர்களின் முன்னேற்றத்திற்காக வாங்க ப்பட்ட கம்யூட்டர்களை மாண வர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில், நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.இதில், கடந்த 5 ஆண்டுகளாக பள்ளி மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிக ளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பிட கட்டடம் கட்டி பல ஆண்டுகளாக திறக்க ப்படாமல் விஷப்பூச்சிகளின் கூடாரமாக உள்ளதால் மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதே போல், குடிநீர் தொட்டியும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. மாணவர்களுக்காக வாங்க ப்பட்ட கம்யூட்டர்களும் அறையில் வைத்து பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. மாணவர்களின் முன்னேற்றத்திற்காக வாங்க ப்பட்ட கம்யூட்டர்களை மாண வர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவ ர்களின் சேர்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலாவது மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்த ப்பட்டது. இதில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் திம்பி, பள்ளி ஆசிரியர்கள் சிவகுமார், சகாய ஆரோக்கியராஜ், சத்தி, அமலா ஆரோக்கியமேரி, முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×