என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு பைக்கில் வந்து செல்போன் பறித்த வாலிபர்களுக்கு அடி- உதை
    X

    திருட்டு பைக்கில் வந்து செல்போன் பறித்த வாலிபர்களுக்கு அடி- உதை

    • பொதுமக்கள் விரட்டிய போது சறுக்கி கீழே விழுந்தனர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் ஓட்டேரி நம்பிராஜபுரம் சாமி நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 46) காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு சொந்தமான பைக்கை அவருடைய வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் பைக்கை திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து பாலமுருகன் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் திருடிய நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் விருதம்பட்டு மெயின் ரோட்டில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் செல்போனை பறிக்க முயன்றனர்.

    அப்போது சுதாரித்துக் கொண்ட அவர் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அங்கிருந்த பொது மக்கள் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர்களை விரட்டி சென்றனர்.

    அப்போது பதட்டத்தில் பைக் ஓட்டிய வாலிபர்கள் சறுக்கி கீழே விழுந்தனர். பொதுமக்கள் இருவரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    பின்னர் அவர்களை விருதம்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் வேலூர் வசந்தபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (28) மற்றும் வசந்தகுமார் (20) என்பது தெரிய வந்தது. அவர்கள் ஓட்டி வந்த பைக் பாலமுருகன் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்கள் பாகாயம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    போலீசார் ஆனந்தராஜ், வசந்த குமார் இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×