என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய் மண்டையை உடைத்த வாலிபர் கைது
    X

    தாய் மண்டையை உடைத்த வாலிபர் கைது

    • மது போதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் ஏஜி நகரை சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி சிவகாமி (வயது 60).

    இவரது மகன்கள் கோபி (38), முரளி (37). விநாயகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கோபி கார்பென்டராக வேலை செய்து வருகிறார். மதுவுக்கு அடிமையான கோபி அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு வந்து ஆபாசமாக பேசிக்கொண்டு இருந்தார். இதனை அவரது தம்பி முரளி தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கோபி, தம்பி முரளியை தாக்கினார்.

    இதனை கண்ட அவரது தாய் சிவகாமி தடுக்க முயன்றார். அப்போது கோபி தனது தாயை தலையில் பலமாக தாக்கினார். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டியது.

    உறவினர்கள் சிவகாமியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசி வழக்கு பதிவு செய்து கோபியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×