என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலையில் தீப்பிடித்து பெண் சாவு
வேலூர்:
வேலூர், கஸ்பா பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி லலிதா (வயது 58).
கடந்த மாதம் 16-ந் தேதி லலிதா வீட்டில் தீபம் ஏற்றுக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்து எரிந்தது.
தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. லலிதா வலியால் அலறி துடித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்து லலிதா உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் லலிதாவை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி லலிதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தெற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X