என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலூரில் இரவில் பரவலாக மழை
- சுவர் இடிந்து கார், பைக் சேதம் ஒருவர் படுகாயம்
- குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
வேலூர்:
வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனினும் மாலை வேளை களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
நேற்று பகலில் 95.5 டிகிரி வெப்பம் பதிவானது. பிற்பகலில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.
இந்த நிலையில் மாலை 6.30 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங் களில் மழைநீர் தேங்கியது.
வேலூர் மக்கான் அம்பேத்கர் நகர் அருகே சாலையோரம் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சில நிறுவனங்களும், குடோன்களும் உள்ளன.
இந்த நிலையில் இரவு 9.30 மணி அளவில் திடீரென கட்டிடத்தின் மேல் தளத்தின் நடைபாதை சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அதன் கீழே நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமானது. இதில் அங்கிருந்த ஒருவருக்கு காலில்காயம் ஏற்பட்டது.
இதேபோல் குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மழையின் காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசிய தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்