search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டோகா நாட்டுடன் வி.ஐ.டி. புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    டோகா நாட்டுடன் வி.ஐ.டி. புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ள வழி வகை
    • பேராசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்

    வேலூர்:

    வி.ஐ.டி. மற்றும் டோகோ நாட்டின் அரசு கல்வி நிறுவங்களின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. வி.ஐ.டி., டோகோ நாட்டின் அரசு கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் (பி.எச்.டி) மேற்கொள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி வகை செய்யும்.

    மேலும் வி.ஐ.டி. மற்றும் டோகோ நாட்டின் அரசு கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் பரிமாற்றம் மற்றும் கூட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டோகோ நாட்டின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சர் பேராசிரியர் அய்ஹோ வட்டேபா மற்றும் வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் கையெழுத்திட்டனர்.

    நிகர்ச்சியில் இந்தியாவிற்கான டோகோ நாட்டின் தூதரக அதிகாரி யாவோ இடம் ஆக்பேமாடோ , வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தர் டாக்டர். எஸ்.நாராயணன், பதிவாளர் டி.ஜெயபாரதி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×