என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் அண்ணா சாலையில் இன்று காலை போக்குவரத்து நெரிசலில் சிக்கிய திணறிய வாகன ஓட்டிகள்.
வேலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு
- லட்சுமி தியேட்டர் அருகே திணறும் வாகனங்கள்
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூரில் பள்ளி கல்லூரி செல்லும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது.
அதிக அளவில் பள்ளி வாகனங்கள் மற்றும் மாணவ மாணவர்கள் சென்று வருவதால் அண்ணா சாலையில் அந்த நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகரிக்கிறது. குறிப்பாக லட்சுமி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே காலை 8.30 மணி முதல் 9 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அந்த பகுதியில் உள்ள பள்ளி வாகனங்கள் சாலையின் குறுக்காக செல்வதால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நீடிக்கிறது.
தினமும் காலையில் இதே நிலை தொடர்வதால் அந்த வழியாக அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லகூடிய மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
குறைந்த அளவில் போக்குவரத்து போலீசார் நின்று சிரமைத்து வருகின்றனர்.
ஆனாலும் நெரிசல் தீர்ந்தபாடில்லை அந்த பகுதியில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நிறுத்தி குறிப்பிட்ட நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.