என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கோட்டையில் வாக்கிங் செல்பவர்களுக்கு வசதியாக 50 கிரானைட் இருக்கைகள
    X

    வேலூர் கோட்டையில் மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் ஆய்வு செய்த காட்சி.

    வேலூர் கோட்டையில் வாக்கிங் செல்பவர்களுக்கு வசதியாக 50 கிரானைட் இருக்கைகள

    • மேயர் சுஜாதா ஆய்வு
    • கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது

    வேலூர்,

    வேலூர் கோட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழமை மாறாமல் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

    கோட்டை கொத்தளம் இரவிலும் மிளிறும் வகையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கோட்டை வளாகத்திற்கு ஏராளமான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    கோட்டையில் தினந்தோ றும் ஆயிரக்கணக்கானோர் வாக்கிங் செல்கின்றனர். ஆனால் கோட்டையில் சுற்றுலா பயணிகள் மற்றும் வாக்கிங் செல்வோர்கள் அமருவதற்கு ஏதுவான இருக்கைகள் எதுவும் இல்லை.

    இந்த நிலையில் கோட்டையில் நடை பயிற்சி செல்லும் மைதானத்தைச் சுற்றிலும் இருக்கைகள் அமைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து கோட்டையில் வாக்கிங் செல்பவர்கள் அமர்ந்து செல்லும் வகையில் 50 இருக்கைகள் அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று கோட்டை வளாகத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இது குறித்து மேயர் சுஜாதா கூறுகையில்:-

    கோட்டையில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என வாக்கிங் செல்பவர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் வாக்கிங் செல்பவர்கள் அமர வசதியாக 50 இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இது கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் கோட்டை வளாகத்திற்குள் கூடுதலாக 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. கோட்டை சுற்றுச்சா லையில் செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க அதிக ஒளி வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் பொருத்தப்படும். அங்கும் கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது என்றார்.

    Next Story
    ×