என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலங்காடு பொற்கொடியம்மன் ஏரி திருவிழா
    X

    வேலங்காடு பொற்கொடியம்மன் ஏரி திருவிழா

    • 50 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
    • தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணியில் போக்கு வரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

    வேலுார்:

    வேலுார் மாவட்டத்தில் பழமையும் பாரம்பரியமும் கொண்ட பிரசித்திபெற்ற திருவிழாவான, வேலங் காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமை சிறப்பாக நடக்கும்.

    அதன்படி, இந்த ஆண்டு திருவிழா, வரும் 10-ந் தேதி நடக்கவுள்ளது. இதில் பங் கேற்கும் பக்தர்கள் சிரம மின்றி சென்றுவரும் வகை யில், வேலுார் - வேலங் காடு வழித்தடம் மற்றும் குடியாத்தம் - வேலங்காடு வழித்த டத்தில் தலா 25 வீதம் மொத்தம் 50 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும், பக்தர்கள் எண் ணிக்கை அதிகமாக இருக்கும் நேரங்களில், அதற் கேற்ப கூடுதலாக சிறப்புபஸ்கள் இயக்கவும், மண்டல அரசு போக்கு வரத்து கழகம் தரப்பில் திட்டமிடப் பட்டுள்ளது.

    அதோடு, வேலங்காடு பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது தொடர்பான நடவடிக்கையில், போக்கு வரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனாலும், இதற்கு தேவையான இடத்தை ஒதுக்கீடு செய்வதில், திரு விழா கமிட்டியினர் எந்த முயற்சியும் மேற்கொள்வ தில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இதனால், அந்த பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதில், ஒவ்வொரு ஆண்டும் போக் குவரத்து துறையினர் கடும் சிரமப்படுகின்றனர்.

    அதே நேரம், பக்தர்கள் தேவைக்காக ஏதாவது ஏற்பாடு செய்து, சிறப்பு பஸ்களை இயக்கி ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×