search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி திருநங்கை சாவு
    X

    வாகனம் மோதி திருநங்கை சாவு

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலம் சுகர் மில் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன்.இவரது மகன் கோவிந்தன் (வயது 36). இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறினார்.

    கோவிந்தன் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டு ரத்தினகிரி அடுத்த அரப்பாக்கம் பாப்சு நகரில் தனியாக தங்கி இருந்தார்.

    நேற்று இரவு அரப்பாக்கத்தில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்தார். அப்போது சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கோவிந்தன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் கோவிந்தன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி, விஜயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவிந்தனின் தாயார் பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×