என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் குழந்தைகள் உரிமை குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
    • ஏராளமானோர் பங்கேற்பு

    குடியாத்தம் :

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் சைல்டு லைன் சார்பாக குடியாத்தம் ஒன்றிய அளவில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி நேற்று குடியாத்தம் வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யா னந்தம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஒன்றிய குழு துணை தலைவர் கே.கே.வி. அருண்முரளி, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் மமதாஇமகிரிபாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி, உதவி பொது மேலாளர் மோகனவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்ட் லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் வரவேற்றார்

    இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி, குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவகலைவாணன், முதல் நிலை திட்ட மேலாளர்கள் கிருபாகரன், சரவணன் ஆகியோர் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தைகளின் உரிமைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்தும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் சட்டங்கள் குறித்தும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பட காட்சிகள் மூலம் விரிவாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ்.பி.சக்திதாசன், ஆர்.பாபு பி.கே.குமரன், கே.ஆர்.உமாபதி, சாந்தி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் முதுநிலை மேலாளர் மணிசேகர் நன்றி கூறினார்.

    Next Story
    ×