என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான 4 - ம் கட்ட கலந்தாய்வு
    X

    முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான 4 - ம் கட்ட கலந்தாய்வு

    • 1 - ந்தேதி நடக்கிறது
    • கல்லூரி முதல்வர் தகவல்

    வேலூர்:

    வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை 4 - ம் கட்ட கலந்தாய்வு வருகிற 1 - ந் தேதி நடைபெற உள்ளது.

    எனவே தமிழ் , ஆங்கிலம், வரலாறு , பொருளாதாரம் உள்ளிட்ட 12 பாடப்பிரிவுகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் என சுழற்சி வரிசையில் 889 மாணவர்களும் 44 மாணவிகளும் சேர்க்கப்பட உள்ளனர்.

    அதன்படி 274.9 முதல் 255 வரையிலான கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.கலந்தாய்வு காலை 9:30 மணி அளவில் தொடங்குகிறது.

    மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் நேரில் வந்து அவற்றை ஒப்படைத்து சரிபார்க்கப்பட்ட பின்னரே சேர்க்கை உறுதி செய்யப்படும் என கல்லூரி முதல்வர் மலர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×