என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரில் இருந்தபடியே உயிரிழந்த வாலிபர்
    X

    காரில் இருந்தபடியே உயிரிழந்த வாலிபர்

    • போதையில் இறந்திருக்கலாம் என சந்தேகம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் பாகாயம் அருகே உள்ள என்.கே. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவருடைய மகன் ராஜேஷ் (வயது 37) இவர் நேற்று அடுக்கம்பாறை அருகே உள்ள காளி கோவில் அருகே காரை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்தார்.

    நீண்ட நேரமாக அவர் காரில் அசைவு இல்லாமல் இருந்ததை கண்ட பொதுமக்கள் உடனடியாக பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராஜேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மது போதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×