என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகாரிகள் அதிரடியால் மீன் மார்க்கெட்டில் கடைகள் மூடப்பட்டன
    X

    வேலூர் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்த காட்சி.

    அதிகாரிகள் அதிரடியால் மீன் மார்க்கெட்டில் கடைகள் மூடப்பட்டன

    • வேலூரில் தடையை மீறி திறக்கப்பட்டதால் நடவடிக்கை
    • காந்தி ஜெயந்தியையொட்டி இறைச்சி விற்பனை செய்ய தடை

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி இன்று அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்வது கூடாது. கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. தடையை மீறிச் செயல்படுபவா்கள் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்வதுடன் சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் கோட்டை அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் தடையை மீறி சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதில் பொதுமக்கள் சென்று மீன்கள் வாங்கிச் சென்றனர்.

    இதுகுறித்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் உதவி கலெக்டர் பூங்கொடி தாசில்தார் செந்தில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீன் மார்க்கெட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த மீன் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டனர்.

    அப்போது வியாபாரிகள் சிலர் ஆடு கோழி இறைச்சி ஏதும் விற்பனை செய்யவில்லை. மீன்கள் மட்டுமே விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

    மீன்களும் இறைச்சி வகை தான் அவற்றை விற்பனை செய்யக் கூடாது என அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகள் மூடப்பட்டன.

    அந்த நேரத்தில் மீன் வாங்க சென்ற பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சிறிது நேரம் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×