என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேழ்வரகு விளைச்சல் அமோகம்
    X

    கேழ்வரகு விளைச்சல் அமோகம்

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • 15 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு பகுதியில் கேழ்வரகு விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பள்ளிக்குப்பம், அகரம், குருவராஜபாளையம், ஒடுகத்தூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    மலைப்பாங்கான இந்த பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் மலர்கள், வாழை, சோளம், கம்பு, கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் விளைவிக்கப்படுகிறது.

    இந்நிலையில் அணைக்கட்டு சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தில் தற்போது கேழ்வரகு செழித்து வளர்ந்துள்ளது.

    கேழ்வரகில் வரக்கூடிய அனைத்து கதிர் பிடித்து மகசூல் அதிகரித்துள்ளது. விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    செழிப்பாக நன்கு விளைந்துள்ள கேழ்வரகு இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×