search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியின் உடைக்கப்பட்ட மதகுகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும்
    X

    வீணாக செல்லும் ஏரித் தண்ணீர்.

    ஏரியின் உடைக்கப்பட்ட மதகுகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும்

    • ஏரி கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது
    • இந்திய குடியரசு கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றானது குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி என்கிற செருவங்கி ஏரியாகும்.

    இந்த நெல்லூர்பேட்டை பெரிய ஏரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது சுமார் 100 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது மோர்தானா அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை காலங்களில் பெய்யும் மழைத் தண்ணீர் இந்த ஏரியில் நிரம்பும் கடந்த ஆண்டு இந்த ஏரி நிரம்பியது அப்போது ஏரிக்கரையின் கரை பல இடங்களில் பழுதாகி பல மீட்டர் தூரத்திற்கு கீழே இறங்கியது இதனால் ஏரி கரை உடையும் அபாயம் ஏற்பட்டது இதனை கருத்தில் கொண்டு செட்டி குப்பம் பகுதியில் கோடிசெல்லும் பகுதியில் உள்ள மதகுகளை உடைத்து சுமார் 40 சதவீதம் தண்ணீர் வெளியேற்றினர். அதன் பின்னர் அந்த கோடிப்போகும் மதகுகளை கட்டவில்லை இதனால் ஏரிக்கு வரும் தண்ணீர் பல மாதங்களாக வீணாக செல்கிறது வீணாக செல்லும் தண்ணீர் பல இடங்களில் குடியிருப்பு பகுதிக்கும் விளைநிலங்களுக்குள் புகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில் இந்திய குடியரசு கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் இராசி.தலித்குமார்

    வேலூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் நெல்லூர்பேட்டை ஏரியில் மதகு உடைக்கப்பட்டதை சரிசெய்யவும், கரையை பலப்படுத்த பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாததால் ஏரி தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது எனவே கலெக்டர் போர்க்கால அடிப்படையில் ஏரிக் கரையை பலப்படுத்தி மதகுகளை சீரமைக்க வேண்டும் இதனை தவிர நீர் வரத்து கால்வாய்கள், நீர் வெளியேற்று கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என அந்த புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×