search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெரு நாய்களை ஓட ஓட விரட்டி தாக்கிய கொள்ளையன்
    X

    தெரு நாய்களை ஓட ஓட விரட்டி தாக்கிய கொள்ளையன்

    • வீடு புகுந்து திருட முயற்சி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, பாலாற்றங்கரையோரம் உள்ள சத்யா நகர் ,ஓசி பெருமாள் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி டிவோட்டி (வயது 30). இவர் குழந்தைகளுடன் சத்யா நகரில் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் கொள்ளையன் ஒருவன் டிவோட்டியின் வீட்டின் மதில் சுவர் ஏறி உள்பக்கமாக குதித்தார். அப்போது தெருவில் இருந்த நாய்கள் கொள்ளையனை பார்த்து குறைத்தன.

    சத்தம் கேட்ட டிவோட்டி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கிருந்த கொள்ளையனை பார்த்து டிவோட்டி கத்தினார். இதனால் பதறிப்போன கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இது குறித்து டிவோட்டி விருதம்பட்டு போலீசில் புகார் செய்தார். காட்பாடி டிஎஸ்பி பழனி மற்றும் விருதம்பட்டு போலீசார் டிவோட்டியின் வீட்டிற்கு சென்று அவரது வீட்டின் முன்பாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் தெருவில் பெரிய கம்புடன் கொள்ளையன் வருகிறான். அவனை பார்த்து குறைக்கும் நாய்களை கம்பால் விரட்டி விரட்டி தாக்கியுள்ளார். அதற்கு பிறகு வீடு புகுந்து திருட முயன்றுள்ளார். இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதி மக்கள் திக்..திக்... மன நிலையில் உள்ளனர்.

    Next Story
    ×