search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    • குடும்ப பிரச்சனையால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியை சேர்ந்தவர் இந்திரஜித் செங்குப்தா. இவரது மகன் சுபஜித் செங்குப்தா (வயது 29). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று இரவு ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டின் படுக்கையறைக்கு சென்றுள்ளார்.

    நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கிட்டு தற்க்கொலை செய்துகொண்டுள்ளார்.

    இதனைகண்டு அதிர்ச்சையடைந்த குடும்பத்தினர். உடனடியாக பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிகொண்டா போலீசார் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×