search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது
    X

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது

    • பலத்த சோதனைக்கு பிறகு அனுமதி
    • சரியான நேரத்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும்

    வேலூர்:

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு இன்று முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 5220 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் கிங்ஸ்டன் என்ஜினியரிங் கல்லூரி, வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் மற்றும் தந்தை பெரியார் என்ஜீனியரிங் கல்லூரி ஆகிய 3 மையங்களில் காலை மாலை இரு வேளைகள் நடைபெறுகிறது.

    கணினி வழித் தேர்வுக்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (www.trb.tn.nic.in) வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலையில் மையங்களில் தேர்வு தொடங்கியது. திருவண்ணா மலை திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இன்று ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தேர்வு மையங்களில் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்ப ட்டனர்.கால்குலேட்டர் செல்போன் உள்ளிட்டவை அனுமதிக்கப்படவில்லை.

    வருகிற நாட்களில் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் சரியான நேரத்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×