என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடமாடும் நவீன தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைத்தார்.
நவீன நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனம்
- போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
- ரூ.70 ஆயிரம் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது
வேலூர்:
தமிழக காவல் துறையில் தடய அறிவியல் பயன்பாட்டுக்காக ரூ.3 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 14 நடமாடும் நவீன தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
இதில், ஒரு வாகனம் வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வாகனத்தை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைத்தார்.
அப்போது, மாவட்ட தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ஜேம்ஸ் அந்தோணிராஜ், துணை இயக்குநர் சோபியா ஜோசப், முன்னாள் தடய அறிவியல் உதவி இயக்குநர் பாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன் (தலைமையிடம்), குணசேகரன் (இணைய வழி குற்றப்பிரிவு), மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த வாகனத்தில் ரத்த கறைகளை கண்டறியும் வசதி, பாலியல் குற்ற சம்பவங்களில் தடயங்களை விரைந்து சேகரித்து ஆய்வு செய்யவும், வெடி விபத்து சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்தின் வகைகளை ஆய்வு செய்யவும், ரத்த வகைகள் ஆய்வு, துப்பாக்கி துண்டுகளால் சேதம் ஏற்பட்டுள்ளதா? என ஆய்வு செய்வது என நவீன வசதிகள் கொண்டதாக இருக்கும். இந்த வாகனம் குற்றச்சம்பவங்கள் நடைபெற்ற இடத்துக்கு அனுப்பி பயன்படுத்தவுள்ளனர்.






