search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடக்கம்
    X

    குடியாத்தத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளை ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் தொடங்கி வைத்தார்.

    மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடக்கம்

    • 25 அணிகள் பங்கேற்கிறது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் மெர்குரி கிரிக்கெட் கிளப் கவுண்டி கிரிக்கெட் கிளப் மற்றும் குடியாத்தம் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாநில அளவிலான 31ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    இந்த கிரிக்கெட் போட்டிகளை ஒன்றிய குழு உறுப்பினர் பி.எச்.இமகிரிபாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சக்திதாசன், குமரன், வார்டு உறுப்பினர் கமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் குடியாத்தம், வேலூர், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆம்பூர், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 25 சிறந்த அணிகள் கலந்து கொள்கிறது.

    இதில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையும் 50,000 ரூபாய் பரிசும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு கோப்பையும் 25,000 பரிசும் வழங்கப்படுகிறது.

    இந்த கிரிக்கெட் போட்டிகள் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெறுகிறது

    இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் தலைவர் கார்மேகபாபு, நிர்வாகிகள் ராஜ்குமார், ராம்பிரசாத், சுனில் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்,

    Next Story
    ×