என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடக்கம்
குடியாத்தம்:
குடியாத்தம் மெர்குரி கிரிக்கெட் கிளப் கவுண்டி கிரிக்கெட் கிளப் மற்றும் குடியாத்தம் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாநில அளவிலான 31ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்த கிரிக்கெட் போட்டிகளை ஒன்றிய குழு உறுப்பினர் பி.எச்.இமகிரிபாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சக்திதாசன், குமரன், வார்டு உறுப்பினர் கமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் குடியாத்தம், வேலூர், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆம்பூர், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 25 சிறந்த அணிகள் கலந்து கொள்கிறது.
இதில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையும் 50,000 ரூபாய் பரிசும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு கோப்பையும் 25,000 பரிசும் வழங்கப்படுகிறது.
இந்த கிரிக்கெட் போட்டிகள் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெறுகிறது
இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் தலைவர் கார்மேகபாபு, நிர்வாகிகள் ராஜ்குமார், ராம்பிரசாத், சுனில் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்,
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்