search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்பிரிங்டேஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா
    X

    ஸ்பிரிங்டேஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா

    • வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பங்கேற்பு
    • வி.ஐ.டி. உயர்கல்வி திட்டத்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் ஸ்பிரிங்டேஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டுவிழா நடந்தது. பள்ளி தாளாளர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    பள்ளி முதல்வர் ஆனந்தி ராஜேந்திரன் வரவேற்று பேசுகையில்:-

    2017-18-ம் ஆண்டில் 400 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளி அனைவரின் உழைப்பினால் இன்று 2,200 மாணவர்கள் படித்து வருகின்றனர் என்றார்.

    சிறப்பு அழைப்பாளராக வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநா தன் கலந்து கொண்டு பள்ளியில் இந்த ஆண்டு கல்வி தொடர் புடைய இணை செயல்பாடுகளில் சாதனை புரிந்த மாணவ- மாணவிகளுக்கும், மாஸ்டர்ஜீ-யில் பயின்று பல்வேறு உயர்ப டிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரொக்கத்தொகை, பரிசு, கோப்பைகள் வழங்கினார். அவர் பேசுகையில், பள்ளி கல்வியின் வளர்ச்சி மற்றும் தரம் ஒரு நாட்டின் உயர்கல்வியில் வளர்ச்சி, தரத்தையும் நிச்சயம் உயர்த்தும்.

    மேலைநாடுகளுக்கு இணையாக இந்தியாவில் கல்விக்கு செலவு செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

    வி.ஐ.டி.யில் கடந்த ஆண்டு படித்த அனைத்து மாணவர்களும் நல்ல வேலைவாய்ப்புகளை பெற்ற. னர். 84 நாடுகளில் வி.ஐ.டி. மாணவர்கள் வேலை செய்கிறார்கள். விரைவில் ஸ்பிரிங்டேஸ் பள்ளியை இந்தியா திரும்பி பார்க்கும் நிலை நிச்சயம் வரும்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த பள்ளியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்க ளுக்கு வி.ஐ.டி. சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றார்.

    விழாவில் ஸ்பிரிங்டேஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் வி.ஐ.டி. உயர்கல்வி திட்டத்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. இதில், பள்ளி துணை முதல்வர் சில்லிசுக் கலா, ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்பிரிங்டேஸ் பள்ளிக்கல்வி இயக்குனர் ரம்யா சிவக்குமார் செய்திருந்தார்.

    Next Story
    ×