search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
    X

    தமிழ்நாடு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி

    • வருகிற 12-ந் தேதி காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    தமிழ்நாடு"என பெயர் சூட்டப்பட்ட 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி தமிழ்நாடு நாளாக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இது குறித்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியதாவது:-

    மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள்" வருகிற 12-ந் தேதி காலை 9.30 மணியளவில் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனித்தனியாக நடைபெறவுள்ளது.

    இதில், வெற்றிபெறும் மாணவர் களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் கீழ்நிலை அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு கட்டுரை, பேச்சு போட்டிக்கு தனித்தனியே 60 மாணவர்கள் வீதம் தேர்வு செய்ய படுவார்கள். முதன்மைக் கல்வி அலுவல ரால் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இடம்பெறும் மாணவர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியும்.

    மாவட்ட அளவிலான போட்டி களில் பங்கேற்க பரிந்துரைக்கப் படும் மாணவர்கள் படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கையெழுத்து பெற்று போட்டி நடக்கும் நாளன்று வேலுார் மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநரிடம் நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

    தலைப்புகள்

    கட்டுரை போட்டிக்கு 'தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்' என்ற தலைப்பும், பேச்சு போட்டிக்கு 'தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப் போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்' என்ற தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், விவரங்களுக்கு வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் அலுவலகத்தை 0416-2256166 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரிலோ அணுகலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×