search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி பலி
    X

    பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி பலி

    • கோடை விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு வந்த பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    கர்நாடகா மாநிலம் பத்ராவதி அடுத்த காளங்கட்டை பகுதியைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 2 மகள்களும், பிரேம் (வயது 11) என்ற மகனும் உள்ளார்.

    மாணவன்

    பிரேம் அதே பகுதியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். ரேகாவின் பெற்றோர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கலைஞர் நகரில் வசித்து வருகின்றனர்.

    கோடை விடுமுறை என்பதால் பிரேம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள தாத்தா மூர்த்தியின் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு அருகே அவர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பிரேம் மாயமானார்.

    இதனையடுத்து மூர்த்தி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடினர். மாணவன் கிடைக்காததால் மூர்த்தி நேற்று மாலை குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மாயமான பிரேமை தேடி வந்தனர்.

    இவர்கள் வசிக்கும் அதே பகுதி அருகே அம்மணாங்குப்பம் ஏரி உள்ளது. இன்று காலை சந்தேகத்தில் மாணவனின் தாத்தா ஏரியில் இறங்கி தேடினார்.

    ஏரியில் பிணம்

    அப்போது மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிந்தது. பின்னர் மாணவனின் உடலை வெளியே கொண்டு வந்தார்.

    தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் விரைந்து சென்று பிரேமின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×