search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீநாராயணி பீடத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சரஸ்வதி யாகம்
    X

    ஸ்ரீநாராயணி பீடத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சரஸ்வதி யாகம்

    • 25-ந்தேதி நடக்கிறது
    • மாணவர்களுக்கு எழுதுகோல் வழங்கப்பட உள்ளது

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் சக்தி அம்மா, ஆன்மிகத்துடன் பல்வேறு சமுதாய நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

    வித்யா நேத்ரம் என்ற திட்டத்தின் கீழ் 10,11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் சிறப்பாக வெற்றி பெற ஸ்ரீமேதா சூக்தயாகம் என்ற ஸ்ரீசரஸ்வதி யாகம் ஒவ் வொரு ஆண்டும் ஸ்ரீநாராயணி பீடத்தில் நடந்து வருகிறது.

    இதில், ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு சக்தி அம்மாவின் ஆசி பெறுகிறார்கள்.

    அதன்படி இந்தாண்டு வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் நாராயணி பீடத்தில் ஸ்ரீசரஸ்வதி யாகம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்வு பயம் நீங்கி படித் ததை நினைவில் கொண்டு வரும் வகையில் சிறப்பு அம்சமாக இந்த யாகம் நடைபெறுகிறது.

    யாகத்தில் கலந்து கொள்ளும் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு யாகத்தில் வைக்கப்பட்ட சக்தி அம்மாவால் ஆசீர்வதிக்கப்பட்ட எழுதுகோல் வழங் கப்பட உள்ளது.

    இதில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.சிவஞானம், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.முனுசாமி மற்றும் கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டு மாணவர்க ளுக்கு தேர்வு எழுதும் முறைகளை பற்றி அறிவுரைகள் வழங்க உள்ளனர்.

    இதில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சக்தி அம்மாவின் அருளாசி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×