என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் மணல் குவாரி தொடங்க கேட்டு மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மணல் குவாரி தொடங்க வேண்டும்
- மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
குடியாத்தம் :
குடியாத்தம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க கிளை மற்றும் வேலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகே ஒலக்காசி பகுதியில் மணல் குவாரி தொடங்கிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு குடியாத்தம் தாலுகா ஒலக்காசி ஊராட்சி சித்தாத்தூர் பகுதியில் அரசு மணல் குவாரி தொடங்கிட வேண்டும்.
வாழ்வாதாரம் பாதிப்பு
குடியாத்தம் பகுதியில் மணல் குவாரி தொடங்கினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வு மேம்படும், ஆயிரக்கணக்கான ஏழை எளிய சாதாரண மக்கள் குறைந்த விலையில் மணல் பெறவும், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வு மேம்படும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டுவண்டி தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.பங்குமூர்த்தி, செயலாளர் டி.விஜயன் ஆகியோர் தலைமை தாங்கினர்.சங்க நிர்வாகிகள் சங்கர், மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், வேலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.குப்பு, சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சி.சரவணன், மாவட்ட துணை தலைவர் பி.காத்தவராயன், விவசாய தொழிலாளர் சங்க பி. குணசேகரன், விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் கே.சாமிநாதன், பீடி சங்க பொருளாளர் எஸ்.சிலம்பரசன் உள்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.






