என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோர்தானா கால்வாயில் வாலிபர் பிணம்
    X

    மோர்தானா கால்வாயில் வாலிபர் பிணம்

    • 2 நாட்களுக்கு முன்பு மாயமானார்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சேத்துவண்டை கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 32). ஆம்பூர் அடுத்த பச்சை குப்பம் பகுதியில் தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திரு மணமாகி லாவண்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தர்மலிங்கம் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று மதியம் குடியாத்தம் காந்திநகர் மோர்தனா கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள தென் னந்தோப்பில் தர்மலிங்கம் பிணமாக கிடப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தர்ம லிங்கத்தின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×