என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட பொதுசுகாதார நூற்றாண்டு நினைவு ஜோதி
    X

    வேலூர் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட பொதுசுகாதார நூற்றாண்டு நினைவு ஜோதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மருத்துவ துறையினர் வழங்கினர்
    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்

    வேலூர்:

    பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நினைவு ஜோதி சென்னையில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக செல்கிறது.

    அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தை வந்தடைந்த ஜோதி நேற்று வேலூருக்கு கொண்டுவரப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் ஜோதியை, மருத்துவ துறையினர் கலெக்டர் குமார வேல்பாண்டியனிடம் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மாவட்ட நல கல்வியாளர் நீதிபதிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜோதியை மருத்துவ துறையினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    இந்த ஜோதி இன்று (சனிக்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    Next Story
    ×