என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் தபால் துறை போட்டியில் ரூ.6 ஆயிரம் பரிசு
    X

    வேலூரில் தபால் துறை போட்டியில் ரூ.6 ஆயிரம் பரிசு

    • பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்
    • 50 மதிப்பெண்கள் கேள்விகள் இடம் பெறும்.

    வேலூர்,

    பள்ளி மாணவர்களி டையே தபால் தலை சேகரிப்பில் ஆர்வத்தை துாண்டும் வகையில் , இந்திய அஞ்சல் துறை சார்பில் ' தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா ' திட்டம் செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் ஊக்கத்தொகையாக ரூ.6 ஆயிரத்தை மாணவர்கள் பெறலாம்.

    மூலம் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் நல்ல கல்வித்தகுதி மற்றும் த்பால் தலை சேகரிப்பை பொழுதுபோக்காக கொண்ட மாணவர்களுக்கு, நடத்தப்படும் வினாடி- வினா எழுதும் போட்டி மற்றும் தபால் தலைகள் திட்டம் ஆகிய இரு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    முதலாம் நிலை தேர் வில் வினாடி, வினாவுக்கு 50 மதிப்பெண்கள் கேள்விகள் இடம் பெறும்.

    இதில் , வரலாறு , அறிவி யல், கலாச்சாரம் , விளையாட்டு, பிராந்திய மற்றும் தேசிய சார்ந்த புவியியல் மற்றும் தபால் தலை ஆகிய தலைப்புகளில் கேள்விகள் இடம் பெறும்.

    இந்த போட்டியில் வெற்றி பெறு பவர்கள் 2-ம் நிலைக்கு தகுதி பெறுவார்கள். 2-ம் நிலை தேர்வில் தபால் தலைகள் திட்டம் என்ற தலைப்பில் தேர்வு நடக்கும். இதில், 16 தபால் தலைகளுக்கு மிகாமல் 500 வார்த்தைக ளுக்குள் தங்களது செயல் பாட்டை சமர்ப்பிக்க வேண்டும்.

    இதில், வெற்றி பெறுவோருக்கு மேற்கு றிப்பிட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    'ஸ்பார்ஷ்' விண்ணப்பம் சமர்ப்பிக்க வரும் 29-ந் தேதி கடைசி நாளாகும். இதற்கான தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 1 ம் தேதி நடக்கும்.

    வேலுார் மாவட்டத்தில் இந்த தேர் வில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் தபால் துறை ஊழியர்கள் மூலம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவ லகம், வேலுார் கோட்டம், வேலுார்-632001 என்ற முகவரிக்கு விண்ணப்ப ங்களை அனுப்புமாறு கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×