என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரணாம்பட்டில் மக்கள் குறைகேட்பு சிறப்பு முகாம் நடந்த போது எடுத்த படம்.
பேரணாம்பட்டில் மக்கள் குறை கேட்பு சிறப்பு முகாம்
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.
- பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.
பேரணாம்பட்டு:
பேர்ணாம்பட்டு ஸ்டார், ஃபங்ஷன் ஹாலில் மக்கள் குைற கேட்பு சிறப்பு முகாம் நடந்தது.
இந்த சிறப்பு முகாமை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கதிர்ஆனந்த் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வில்வநாதன் அமுலுவிஜயன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செயன், ஒன்றிய குழு தலைவர் ஜெ.சித்ரா ஜனர்தனன் ஒன்றியக்குழு துணைத்தலைவர் டி .லலிதாடேவிட், நகரமன்றத் தலைவர் பிரேமா, வெற்றிவேல், நகரமன்றத் துணைத்தலைவர் ஆழியார் ஜூபேர் அஹமது, தாசில்தார் வெங்கடேசன், துணை தாசில்தார்கள் இள வடிவேலு, சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி, நகராட்சி பொறியாளர் கோபு, கிராம நிர்வாக அலுவலர்கள் உதயகுமார், கோபிநாத் , எம்.ஜெயக்குமார். வெங்கடேசன், மேகநாதன் சிவராமன், அருண் குமார் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






