என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த நோயாளிகள், குழந்தைகள்
- கூடுதல் போலீசார் நியமிக்க வலியுறுத்தல்
- கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அவதி
குடியாத்தம்:
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் 800 கன அடி தண்ணீர் தற்போது கவுண்டன்யமகாநதி ஆற்றில் 800 கன அடிக்கும் அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் செல்வ தால் கெங்கையம்மன் தரைப்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வருகிறது இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் நகரமே ஸ்தம்பித்தது.
நேற்று காலை சுமார் 8.15 மணி அளவில் திடீரென குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது புதிய பஸ் நிலையம் தொடங்கி பழைய பஸ் நிலையம், அர்ஜுனன்முதலி தெரு, பெரியார் சிலை, காமராஜர் பாலம், தாழையாத்தம் பஜார் சந்தப்பேட்டை பஜார், பேர்ணாம்பட்டு ரோடு, காந்திசவுக், சேம்பள்ளி கூட்ரோடுவரை பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குடியாத்தம் நகரமே ஸ்தம்பித்தது பல சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலாகவே இருந்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு, செல்லும் தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் என பலதரப்பு மக்களும் அவதியுற்றனர், நேற்று திருமண நாள் என்பதால் திருமணத்திற்கு சென்றவர்கள் நெரிசலில் சிக்கி வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சீர் செய்யப்பட்டு அப்பகுதியை கடந்து சென்றது.
நேற்று குடியாத்தம் பகுதியில் வரலாறு காணாத அளவு நெரிசலில் சிக்கித் தவித்தது வாகனங்களில் வந்த பெண்கள் குழந்தைகளை உடன் அழைத்து வந்து இருந்தார்கள் அந்த குழந்தைகள் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் அழுதபடி இருந்தனர்.
போக்குவரத்து நெரிசல் கண்டதும் உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
2 மணி நேரம் சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி இருப்பினும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி காமராஜர் பாலம் அருகே சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்.
சுமார் 3 மணி நேரத்திற்குப் பின்னரே போக்குவரத்து சீரடைந்தது இதனால் வாகன ஓட்டிகளும் கனரக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
காவல்துறை அதிகாரிகள் குடியாத்தத்தில் மழைக்காலங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிக அளவு போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு உடன டியாக கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் பகுதியை மேம்பாலம் ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்